↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
அரலகங்வில பிரதேச சபையின் உறுப்பினர் ஒருவரின் வீட்டை சேதப்படுத்தியமை தொடர்பில் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவின் சகோதரர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 3 ஆம் திகதி பிரதேச சபை உறுப்பினரின் வீட்டை சேதப்படுத்திய குற்றச்சாட்டில் மைத்திரிபால சிறிசேனவின் இளைய சகோதரரான கபில சிறிசேன என்பவரை கைது செய்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரின் அலுவலகம் தெரிவித்துள்ளது.

சம்பவம் தொடர்பாக குற்றம் சுமத்தப்பட்டிருந்த கபில சிறிசேன அரலகங்வில பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.

பொலன்நறுவை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்ட அவர், ஒரு லட்சம் ரூபா பெறுமதியான சரீர பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top