↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
அஜீத் நடிக்கும் 'என்னை அறிந்தால்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுவிட்டதால் படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில் ஐதராபாத் அருகேயுள்ள ஒரு சிறிய ரயில் நிலையத்தில் இரவு நேரத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றதாக கூறப்படுகிறது. இன்னும் இரண்டு நாட்கள் அந்த ரயில் நிலையத்தில் படப்பிடிப்பு நடைபெறும் என்றும், அதன் பின்னர் ஒருசில காட்சிகள் சென்னையில் எடுக்கப்பட வேண்டியதுள்ளது என்று கூறும் படக்குழுவினர் அத்துடன் படப்பிடிப்பு நிறைவடைதாகவும் கூறியுள்ளனர்.

என்னை அறிந்தால் படத்தின் ஆடியோ மற்றும் டிரைலர் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்றும் கவுதம் மேனன் தரப்பில் இருந்து செய்திகள் வெளியாகியுள்ளது. ஏற்கனவே டீசர் மற்றும் சிங்கிள் டிராக் வெளியாகியுள்ள நிலையில் இன்னொரு சிங்கிள் டிராக்கை இரண்டு நாட்களில் வெளியிடவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

அஜீத், த்ரிஷா, அனுஷ்கா, அருண்விஜய் மற்றும் பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு ஹாரீஸ் ஜெயராஜ் இசையமைக்கின்றார். டான்மெக்ரதார் ஒளிப்பதிவு செய்துள்ள இந்த படத்தை ஏ.எம்.ரத்னம் தயாரித்துள்ளார். இந்த படம் வரும் ஜனவரி 9ஆம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸ் ஆகிறது.




0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top