↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவிடம் இருந்து பல பாடங்களை கற்றே தாம் அரசாங்கத்தில் இருந்து வெளியேறியதாக முன்னாள் அமைச்சர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் ஹிருணிக்கா பிரேமச்சந்திரவும் கலந்து கொண்டமை இங்கு விசேட அம்சமாகும்.

மைத்திரிபால சிறிசேனவின் அரசாங்கத்தில் ரணில் விக்ரமசிங்க பிரதமராக நியமிக்கப்படுவார். ஜனாதிபதியிடம் இருந்து பெற்றுக்கொண்ட அனுபவத்தின் அடிப்படையில் இதனை மேற்கொள்வதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதேவேளை இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய ஊவா மாகாண எதிர்க்கட்சித் தலைவர் ஹரின் பெர்ணான்டோ, அரசாங்கம் தொடர்ந்தும் தேர்தல் சட்டங்களை மீறி வருவதாக தெரிவித்தார்.
அரசாங்கத்தின் பிரசாரங்களுக்காக இந்தியாவில் இருந்து கலைஞர்கள் அழைத்து வரப்பட உள்ளதாகவும் அவர் கூறினார்.

இலங்கை கலைஞர்கள் தற்போது இல்லை. அரசாங்கம் சல்மான்கானை இலங்கைக்கு அழைத்து வரவுள்ளது. சல்மான்கானை அழைத்து வந்து நாமல் பேபின் தேர்தல் பிரசாரங்களுக்கு பயன்படுத்த உள்ளனர்.

மகிந்த ராஜபக்ஷவின் தேர்தல் பிரசாரத்திற்கு வருமாறு சல்மான் கானுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருப்பதை பேஸ்புக்கில் பார்த்தேன். தற்போது இலங்கை கலைஞர்களால் அரசாங்கத்திற்கு பயனில்லை. இதனால் இந்தியாவில் இருந்து கலைஞர்களை வரவழைக்க உள்ளனர் எனவும் ஹரின் பெர்ணான்டோ குறிப்பிட்டார்.


0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top