↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
விபச்சார வழக்கில் கைதாகி திருச்சி அரசு மகளிர் காப்பகத்தில் அடைக்கப்பட்டிருந்த பெங்களூரு, மும்பையை சேர்ந்த 6 பெண்கள் சுவர் ஏறி குதித்து தப்பி ஓடியுள்ளனர்.
திருச்சி காஜாமலையில் அரசு மகளிர் காப்பகத்தில், விபச்சார வழக்கு மற்றும் குற்ற வழக்குகளில் கைதானவர்கள் அடைக்கப்பட்டுள்ளனர்.
காப்பகத்தின் கண்காணிப்பாளராக தேவிகா பணியாற்றி வருகிறார். இந்த காப்பகத்தில் 17 பெண்கள் அடைக்கப்பட்டிருந்தனர்.

இதில் விபச்சார வழக்கில் கைதான பெங்களூருவை சேர்ந்த ஷானாஸ்(வயது 25), சல்மா(20), ரஸ்யா(25),ஷானாஷேக்(21) மற்றும் மும்பையை சேர்ந்த நிஷா கனோக்கியா(25), சுமிமண்டல்(23) ஆகிய 6 பேரும் இருந்தனர்.

இந்நிலையில் நேற்று நள்ளிரவு இவர்கள் 6 பேரும் அரசு மகளிர் காப்பகத்தில் இருந்து தப்பியோடினர். காப்பக கண்காணிப்பாளர் தேவிகா அதிகாலையில் சென்று அறைகளை பார்வையிட்ட போது மேற்கண்ட 6 பேரும் கழிவறையில் ஜன்னல் கம்பிகளை வளைத்து வெளியே வந்து சுற்று சுவரை ஏறி குதித்து தப்பியது தெரிந்தது.

மேலும் சுவரை ஏறி தாண்டிய போது இரும்பு முள்வேலி கம்பிகள், பீங்கான்கள் அவர்கள் மீது பட்டதில் ரத்த கறை சுவர் மீது படிந்திருந்தது.
6 பெண்கள் தப்பியோடியதால் அதிர்ச்சியடைந்த தேவிகா, இதுகுறித்து கே.கே.நகர் பொலிசாருக்கு தகவல் தெரிவித்தார்.
தகவல் அறிந்ததும் சப்-இன்ஸ்பெக்டர் இந்திரா மற்றும் பொலிசார் தப்பியோடிய பெண்களை பிடிக்க தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டதில் 2 பெண்களை மட்டும் பிடித்துள்ளனர்.

மீதியுள்ள 4 பேரை பிடிக்க பொலிசார் தீவிர வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.

0 comments:

Post a Comment

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top