↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad

சொத்துக்குவிப்பு வழக்கில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உள்பட 4 பேரின் ஜாமீனை மேலும் 4 மாதங்கள் நீட்டித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சொத்துக்குவிப்பு வழக்கில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உள்பட 4 பேருக்கு வழங்கப்பட்ட இடைக்கால ஜாமீன் இன்றுடன் முடிவடைந்தது. இந்நிலையில், ஜாமீனை நீட்டிக்கக் கோரி ஜெயலலிதா உள்பட 4 பேர் சார்பில் இன்று மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுவை இன்று விசாரித்த உச்ச நீதிமன்றம், ஜெயலலிதா உள்பட 4 பேருக்கு வழங்கப்பட்ட ஜாமீனை மேலும் 4 மாதங்களுக்கு நீடித்து உத்தரவிட்டதோடு, மேல்முறையீட்டு மனுவை கர்நாடக உயர் நீதிமன்றம் 3 மாதத்திற்குள் முடிக்க வேண்டும் என்றும், வழக்கில் சிறப்பு அமர்வை அமைத்து தினமும் விசாரிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.
மேலும், வழக்கு ஆவணங்கள் அனைத்தையும் சுப்பிரமணிய சாமிக்கு வழங்க என்றும், சட்டம்- ஒழுங்கு பிரச்சினை ஏற்பட்டால் நீதிமன்றத்தில் தெரிவிக்க வேண்டும் என்றும் சுப்பிரமணியசாமிக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

சொத்துக்குவிப்பு வழக்கில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் 4 ஆண்டு சிறைத் தண்டனையும், ரூ.100 கோடி அபராதமும் விதித்தது. மேலும், அவரது தோழி சசிகலா மற்றும் இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கும் தலா 4 ஆண்டு சிறைத் தண்டனையும், 10 கோடி ரூபாய் அபராதமும் விதித்தது. இதைத் தொடர்ந்து 4 பேரும் பெங்களூருவில் உள்ள பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டனர்.

இதையடுத்து உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், ஜெயலலிதா உள்பட 4 பேருக்கும் டிசம்பர் 18ம் தேதி (இன்று) வரை இடைக்கால ஜாமீன் வழங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top