இந்திய கிரிக்கெட் அணி அவுஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது.
இந்திய அணி வீரர்கள் அவுஸ்திரேலியா சென்றது முதலே சாப்பாடு பெரிய பிரச்சனையாக இருந்து வந்துள்ளது. இந்திய வீரர்கள் கேட்ட சைவ உணவு முறையாக வழங்கப்படாததால் அதிருப்தி அடைந்தனர்.
அடிலெய்ட் முதலாவது டெஸ்ட் போட்டியின் போது இந்திய அணி வீரர்களுக்காக இந்திய சமையல்காரர்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததால் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.
தற்போது பிரிஸ்பேனில் 2வது டெஸ்ட் போட்டி நடைபெற்ற போது மீண்டும் சாப்பாடு பிரச்சனையை எதிர்கொள்ள நேரிட்டுள்ளனர்.
இந்திய வீரர்கள் தமக்கு சைவ உணவு கிடைக்காத காரணத்தால், குறிப்பாக இஷாந்த் சர்மா ரொம்பவே கோபமாக இருக்கிறார். அவருடன் சுரேஷ் ரெய்னாவும் இணைந்து அணி நிர்வாகத்திடம் கடுமையான கோபத்துடன் புகார் அளித்துள்ளனர்.
வீரர்கள் மட்டுமின்றி ஐ.சி.சியின் பணியாளர்கள், இந்திய அணி இயக்குனர் ரவிசாஸ்திரி ஆகியோருக்கும் இதே சிக்கல் உள்ளதால் இவர்கள் தற்போது வெளியில் இருந்து உணவு வரவழைத்து சாப்பிடுகின்றனர்.

0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.