
நஸ்ரியா தமிழ் சினிமாவில் ஜோதிகாவிற்கு பிறகு அத்தனை எக்ஸ்பிரஷனில் ரசிகர்களை கவர்ந்தவர். இவர் 1994ம் ஆண்டு கேரளாவின் திருவனந்தபுரத்தில் பிறந்தார். சிறு வயதில் இருந்தே குழந்தைகள் பங்கேற்கும் கேம் ஷோ, பாட்டு கச்சேரி என அனைத்திலும் பங்கேற்பார்.
இதை தொடர்ந்து பல தொலைக்காட்சி நிகழ்ச்சியில் தொகுப்பாளராகவும் பணியாற்றிய இவர், மலையாள சினிமாவில் முதன் முதலாக பளுங்கு என்ற படத்தின் மூலம் அறிமுகமானார்.
பின் இவரின் அழகு ஒரு ஆல்பம் வாயிலாக கோலிவுட்டை எட்டிப்பார்த்தது. இவரது நேரம் தமிழ் சினிமா ரசிகர்கள் அனைவரையும் கவர்ந்தது. இதை தொடர்ந்து இவர் நடித்த ராஜா ராணி திரையுலகில் பெரிய நடிகைகளுக்கான அந்தஸ்தை வாங்கி கொடுத்தது.
ஆனால், அதற்குள் மலையாள நடிகர் பஹத் பாசிலை திருமணம் செய்து கொண்டார். பிறகு சினிமாவில் நடிப்பதையும் தவிர்த்து, ரசிகர்களின் மனதை சுக்கு நூறாக உடைத்தார். நடித்தது சில படங்கள் என்றாலும் அனைவரையும் தன் சின்ன சின்ன க்யூட் எக்ஸ்பிரஷனால் கவர்ந்த நஸ்ரியா அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.