இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி நேற்றிரவு டெல்லி மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் சுவாசக்குழாய் நோய்த் தொற்று காரணமாக அனுமதிக் கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இது குறித்து காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் அஜய் மக்கான், ‘‘டெல்லி சர் கங்கா ராம் மருத்துவமனையில் சோனியா காந்தி அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு சுவாசக்குழாய் நோய்த் தொற்றுக்கான சிகிச்சை அளிக்கப்படுகிறது'' என்றார்.
ஏற்கனவே சோனியா காந்திக்கு கடந்த 2011 ஆம் ஆண்டு திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதற்கு சிகிச்சை பெறுவதற்காக அவர் அமெரிக்காவுக்கு சென்றார். அங்கு அவருக்கு 2011 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 5 ஆம் தேதி அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அதன் பின்னர் சோனியா காந்தி, தொடர் மருத்துவ பரிசோதனைக்காக அமெரிக்கா சென்று வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.