↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
‘வீரம்’ படத்தின் வெற்றிக்குப் பிறகு தல அஜித் தற்போது கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் நடித்துள்ள ‘என்னை அறிந்தால்’ படம் பொங்கல் விருந்தாக திரைக்கு வரவிருக்கிறது. இதனால் அஜித் ரசிகர்கள் பொங்கல் திருநாளை எதிர்பார்த்து குஷியுடன் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.
இந்நிலையில் அஜித் தன் அடுத்தப் படத்திற்கான வேளைகளில் முழுமையாக இறங்கிவிட்டாராம். அஜித்தின் அடுத்தப் படத்தை இந்த வருடம் குடும்பங்கள் கொண்டாடும் வெற்றிப் படமாக ‘வீரம்’ படத்தைத் தந்த சிவா இயக்குகிறார். இந்தப் படத்தையும் அஜித்தின் ‘ஆரம்பம்’, ‘என்னை அறிந்தால்’ படங்களின் தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம் தயாரிக்கிறார்.
‘வீரம்’ படத்தை கிராமத்துப் பின்னணியில் தந்திருந்த சிவா, இந்தப் படத்தை முழுக்க முழுக்க நகரத்தில் நடக்கும் ஆக்ஷன் கதையாக உருவாக்கவிருக்கிறாராம். சுறுசுறுப்பாக நடந்துகொண்டிருக்கும் கதை விவாதத்தில், ‘என்னை அறிந்தால்’ படத்தின் பிஸியான வேளைகளுக்கிடையிலும் அவ்வப்போது அஜித்தும் கலந்துகொண்டு சிவாவிற்கு ஒத்துழைப்பு கொடுக்கிறாராம். படத்தை அடுத்த வருட தீபாவளிக்குக் கொண்டுவிட வேண்டும் முடிவெடுத்திருக்கிறார்களாம்.
அப்போ அடுத்த வருடம் தலப் பொங்கல் மட்டுமில்லை. தல தீபாவளியும்தான்…

0 comments:

Post a Comment

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top