↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad

அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கட்சி மாறிவிடுவர் என்ற அச்சத்தில் அவர்களின் வீடுகளில் கண்காணிப்பு செய்மதிகளை அரசாங்கம் பொருத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சியின் அநுரதப்புர நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஹரிசன் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

அரசாங்கத்தில் இருந்து கட்சிமாறுவோரை தடுக்க பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா தகவல் வெளியிட்ட நிலையிலேயே ஹரிசனின் தகவல் வெளியாகியுள்ளது.

இந்தநிலையில் ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமது படுக்கையறை தொடர்பில் விழிப்பாக இருக்க வேண்டும்.

ஏனெனில் படுக்கை அறையில் வைத்தே முக்கிய கலந்துரையாடல்கள் இடம்பெறும் என்பதை அரசாங்கம் அறிந்துள்ளமையால் அவற்றிலும் தமது செய்மதி கண்காணிப்புக்களை மேற்கொள்ளலாம் என்று ஹரிசன் சந்தேகம் வெளியிட்டுள்ளார்.

0 comments:

Post a Comment

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top