ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய், சமந்தா நடித்திருக்கும் படம் கத்தி. தற்போது கத்தி படத்தின் டப்பிங் முடியும் தருவாயில் உள்ளது. இப்படத்தின் டிரெய்லரை சென்சாருக்கு வரும் வெள்ளிக்கிழமை அனுப்பவுள்ளனர். சனிக்கிழமை இப்படத்தின் டிரெய்லர் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. கத்தி படத்திற்கு பல்வேறு தமிழ் அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து கோஷம் எழுப்பிக் கொண்டிருக்கையில் படத்தை தீபாவளி வெளியீடு என போஸ்டரே அடித்து ஒட்ட ஆரம்பித்துவிட்டார்கள் தயாரிப்பு தரப்பில்.
மேலும், ஐ படத்தின் டீசரை பார்த்து மிரண்டுபோயுள்ள இந்திய சினிமா ஐ படத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து தினம் தினம் செய்திகளை எழுதிக் கொண்டிருக்கிறது. இதனை பார்த்த கத்தி தயாரிப்பு நிறுவனம் ஒரு பெரும் தொகையை சில பத்திரிக்கைகளுக்கு கொடுத்துள்ளதாக இன்று செய்திகள் வெளியாகியுள்ளன. தினமும் கத்தி படம் குறித்து செய்திகளை எழுதும்படி பேச்சுவார்த்தையில் அந்த பணம் கைமாறியதாக கூறப்படுகிறது. இது உண்மையா, இல்லை கத்தி படத்தை எதிர்க்கும் தமிழ் அமைப்புகள் கிளப்பிவிட்ட புரளியா என்று இன்னும் சில நாட்களில் தெரிந்துவிடும்.
அதுமட்டுமில்லாமல் கத்தி திரைப்படத்தை தீபாவளிக்கு 4 நாட்களுக்கு முன்னரே வெளியிடவும் ஏற்பாடுகள் நடந்து வருகிறதாம். அதன்படி பார்த்தால் கத்தி அக்டோபர் 17ந் தேதியே திரைக்கு வந்துவிடும் என்று ரசிகர்கள் குஷியில் உள்ளனர்.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.