தெலுங்கில் முன்னணி நாயகியாக வலம் வரும் சமந்தா தமிழில் முன்னணி நாயகி என்ற அந்தஸ்தை பெற வேண்டும் என்று சூர்யாவுடன் நடித்த அஞ்சான் படத்தில் இதுவரை நடித்திராத வகையில் படுகவர்ச்சியாக நடித்தார்.
இருப்பினும் அந்த படம் அவருக்கு கைகொடுக்கவில்லை. தற்போது விஜய் நடிப்பில் தீபாவளிக்கு ரிலீஸாகவிருக்கும் கத்தி படத்தின் மீது தனது முழு நம்பிக்கையும் வைத்திருக்கிறார்.
சமந்தாவுக்கு கோபமே வராது என்றும், எல்லோரிடமும் அன்பாக பழகக் கூடியவர் என்றும், பட உலகினர் பாராட்டுகின்றனர். தனக்கு கெடுதல் நினைப்பவர்களிடமும் கோபப்பட மாட்டார் என்று கூறுகின்றனர்.
இது குறித்து சமந்தாவிடம் கேட்டபோது அவர் அனைவரையும் அதிர வைப்பது போல் பதிலளித்துள்ளார்.
அவர் கூறியதாவது:- எனக்கு கோபம் வராது என்று யார் சொன்னது. நான் பெரிய கோபக்காரி. ஆனால், அதை வெளியே காட்ட மாட்டேன். யார் மேலாவது கோபம் வந்தால் என் மனதுக்கு உள்ளேயே திட்டி தீர்ப்பேன்.
ஒரு டைரக்டர் ஷுட்டிங் ஸ்பாட்ல அரை மணி நேரமா ஒரே காட்சிய திரும்ப திரும்ப நடிக்க சொல்லி எனக்கு ரொம்ப தொல்லை கொடுத்தார். அப்போது, அவர் மேல் பயங்கரமாக கோபம் வந்தது. மனதுக்குள் ‘ராஸ்கல்’, முட்டாள், பன்றி என்றெல்லாம் திட்டினேன். இப்படித்தான் என் கோபத்தை வெளிப்படுத்துவேன் என்று கூறினார்.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.