
ரகுமான் இன்று உலகம் முழுவதும் தெரிகிறார் என்றால் அதற்கு முக்கிய காரணம் மணிரத்னம் தான். ஏனெனில் ரகுமானை சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவரே மணிரத்னம் அவர்கள் தான்.
இவர்கள் கூட்டணியில் இந்த வாரம் திரைக்கு வரவிருக்கும் படம் ஓ காதல் கண்மணி. இப்படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிக்காக நேற்று ஒரு பிரபல தொலைக்காட்சியில் படக்குழுவினர்கள் கலந்து கொண்டனர்.
இதில் வைரமுத்து பேசுகையில் ‘ரகுமான் 1995களில் மிகவும் பின் தங்கியிருந்தார், இசையை அனைத்து இயக்குனர்களுக்கும் தாமதமாக தான் தருவார்’ என கூறினார்.
உடனே மணிரத்னம் ‘தற்போது இந்திய சினிமாவே அந்த காலதாமதத்தை ஏற்று கொண்டு விட்டது’ என குறும்பாக கிண்டல் செய்தார்.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.