ராகுல் ப்ரீத் சிங் என்றால் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு யாரென்று கூட தெரியாது. இவர் தமிழில் தடையற தாக்க, புத்தகம், என்னமோ ஏதோ ஆகிய படங்களில் நடித்துள்ளார்.
ஆனால் இந்த மூன்று படங்களுக்கு ஓரளவு கூட ஓடவில்லை. இதனால் இவர் ராசியில்லாத நடிகை என்று முத்திரை குத்தி விட்டனர். ஆனால் தெலுங்கில் தாராளமாக கவர்ச்சி மழையை பொழிவதால் தற்போது நான்கு தெலுங்கு படங்களை கையில் வைத்துள்ளார்.
இவரிடம் சமந்தாவிற்கு ஏற்ற கதாபாத்திரம் என்னவென்று கேட்டதற்கு, அவர் ரிப்பன் வெட்டுவதற்குதான் பொருத்தமாக இருப்பார் என்று கிண்டலாக பதிலளித்து சமந்தா ரசிகர்களின் கோபத்திற்கு ஆளாகியுள்ளார். ஆந்திராவில் எந்த கடை திறப்பு விழா நடந்தாலும் சமந்தாவை அழைப்பார்கள். அந்தளவிற்கு டோலிவுட்டில் சமந்தா ஆழமாக தன்னுடைய முத்திரையை பதித்துள்ளார்.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.