↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad

பிரபல ஆங்கில நாளிதழ் ஒன்று எடுத்த 'மிகவும் விரும்பத்தக்க கோலிவுட் நாயகன்' என்ற சர்வேயில் தல அஜீத் முதலிடம் பெற்றார் என்பதை நேற்று பார்த்தோம். இந்நிலையில் சமீபத்தில் அஜீத்தை உலகின் மிகச்சிறந்த மனிதர் என்று பாராட்டிய பிரபல தெலுங்கு நடிகர் ராணா டக்குபாட்டி தெலுங்கு திரையுலகின் விரும்பத்தக்க நாயகன்' என்ற பட்டத்தை வென்றுள்ளார்.

கடந்த 2013ஆம் வருடம் தெலுங்கு திரையுலகின் விரும்பத்தக்க நாயகன் என்ற பட்டியலில் நான்காம் இடம் வகித்த ராணா, இவ்வருடம் மூன்று படிகள் முன்னேறி முதலிடத்தை பிடித்துள்ளார். கடந்த வருடம் முதலிடத்தில் இருந்த மகேஷ்பாபு தற்போது இரண்டாவது இடத்தில் உள்ளார். மேலும் பிரபாஸ், நிதின், ஜூனியர் என்.டி.ஆர் ஆகியோர் மூன்றாவது, நான்காவது மற்றும் ஐந்தாவது இடங்களை முறையே பிடித்துள்ளனர்.

மேலும் அல்லு அர்ஜூன் 9வது இடத்தையும், ராம்சரண் தேஜா 10 வது இடத்தையும், நாக சைதன்யா, நாகார்ஜுனா ஆகியோர் 11வது மற்றும் 12வது இடத்தையும் பிடித்துள்ளனர்.

'ஆரம்பம்' படத்தில் அஜீத் மற்றும் ராணா ஆகியோர் இணைந்து நடித்ததால் மிக நெருக்கமான நண்பர்களாக மாறியதை அடுத்து இருவரும் அவரவர் மொழிகளில் 'மிகவும் விரும்பத்தக்க நாயகன்' விருதை பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. ராணா நடித்து முடித்துள்ள 'பாஹுபாலி' திரைப்படம் மிக விரைவில் வெளியாகவுள்ளது.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top