↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad

வெங்கட்பிரபு இயக்கியுள்ள 'மாஸ்' படத்தை அடுத்து சூர்யா தற்போது விக்ரம் குமாரின் இயக்கத்தில் '24 மற்றும் பாண்டிராஜின் 'ஹைக்கூ' ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் சூர்யா அடுத்ததாக தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழி படம் ஒன்றில் நடிக்கவிருப்பதாகவும், அந்த படத்தை அவர் பிரபல தயாரிப்பாளர் நந்திதா சின்காவுடன் இணைந்து தயாரிப்பதாகவும் செய்திகள் வெளிவந்தன. மேலும் இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக ப்ரியங்கா சோப்ரா நடிக்கவுள்ளதாகவும் கூறப்பட்டது.

இதுகுறித்து சூர்யாவின் தரப்பினர் தற்போது விளக்கம் அளித்துள்ளனர். சூர்யா தற்போதைய நிலையில் எந்த ஒரு இந்தி படத்திலும் நடிக்க கமிட் ஆகவில்லை என்றும், நந்திதா சின்கா என்பவர் யார் என்றே சூர்யாவுக்கு தெரியாது என்றும், அவருடன் இணைந்து திரைப்படம் ஒன்றை சூர்யா தயாரித்து நடிக்கவுள்ளார் என்பது முழுக்க முழுக்க வதந்தியே என்றும் கூறியுள்ளனர்.

மும்பையில் நடைபெறும் '24' படத்தின் படப்பிடிப்பில் தற்போது சூர்யா பிசியாக உள்ளார். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக சமந்தா நடித்து வருகிறார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இந்த படம் வரும் தீபாவளி தினத்தில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top