↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad ஐபிஎல் 8வது தொடரில் பஞ்சாப் அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் என்று அந்த அணியின் உரிமையாளர்களில் ஒருவரான நடிகை ப்ரீத்தி ஜிந்தா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
கடந்த ஐபிஎல் சீசனில் பட்டையை கிளப்பிய பஞ்சாப் அணி, இந்த தொடரில் 2 போட்டிகளில் விளையாடி ஒரு வெற்றி, ஒரு தோல்வியுடன் 2 புள்ளிகள் பெற்றுள்ளது.
இந்நிலையில் பஞ்சாப் அணியின் செயல்பாடு குறித்து ஆங்கில பத்திரிகை ஒன்றுக்கு பேட்டியளித்த பிரீத்தி ஜிந்தா, பெய்லி, மேக்ஸ்வெல், மிட்செல் ஜான்சன், ஷான் மார்ஷ் போன்ற அவுஸ்திரேலிய வீரர்கள் எங்கள் அணியில் இருப்பது மிகப்பெரிய சொத்தாகும். ஆனால் இந்திய வீரர்கள் தான் அணிக்கு பலம்.
ஷேவாக் அணியில் இருப்பது மிகப்பெரிய பலமாகும். கடந்த ஆண்டு அவர் சென்னை அணிக்கு எதிராக அதிரடியாக விளையாடியதை யாராலும் மறக்க இயலாது. கடந்த காலங்களில் ஐபிஎல் போட்டியில் நான் பார்த்த சிறந்த ஆட்டம் இதுவாகும்.
மேலும் பஞ்சாப் அணியை விற்கபோவதாக கூறப்படுவது வதந்தியே. எங்கள் அணிக்கு அதிகமான லாபம் வருகிறது. வீரர்கள் தொடர்ந்து சிறப்பாக ஆடுவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது என்று தெரிவித்துள்ளார்.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top