↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad ஐபிஎல் தொடரில் வர்ணனையாளராக உள்ள முன்னாள் இந்திய வீரர் கவாஸ்கர், கோஹ்லியிடம் கேட்ட ஒரு கேள்வி அவரை வெட்கப்பட வைத்துள்ளது.
ஐபிஎல் தொடரின் நேற்றைய லீக் ஆட்டத்தில் கொல்கத்தா, பெங்களூர் அணிகள் மோதின.
இந்த ஆட்டம் கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் நடந்தது. இதில் கிறிஸ் கெய்லின் அதிரடி ஆட்டத்தால் பெங்களூர் அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
முன்னதாக நாணய சுழற்சி மேற்கொண்ட போது, இந்திய அணியின் முன்னாள் அணித்தலைவரும், வர்ணனையாளருமான சுனில் கவாஸ்கர் பெங்களூர் அணித்தலைவர் கோஹ்லியிடம் போட்டி குறித்து கருத்து கேட்டார்.
பின்னர் கடைசி கேள்வி என்று மெதுவாக கோஹ்லியின் அருகில் சென்று `அவங்க வந்துருக்காங்களா’ என்று கேட்க, அவரும் ஆமாம்.. வந்துருக்காங்க.. என்று வெட்கப்பட்டு சிரித்தபடியே பதிலளித்தார்.
உடனே அரங்கத்தில் இருந்த ரசிகர்களின் சத்தம் அரங்கத்தை அதிர செய்தது.
மேலும், சிலர் ரிச்சி பெனாட் போன்ற சிறந்த வர்ணனையாளரை இப்போது ரொம்ப மிஸ் பண்றோம் என்று இது தொடர்பாக கருத்துகளை சமூக வலைதளங்களில் பகிர்ந்து கொண்டனர்.

0 comments:

Post a Comment

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top