↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad சிம்பு, விக்ரம் பிரபு, சாந்தனு, சிபி, ஸ்ருதி ஹாசன், கார்த்திகா, துளசி, அக்ஷரா என வாரிசு நட்சத்திரங்கள் கோலிவுட்டில் அதிகரித்துவிட்டனர். இவர்களை பார்ப்பவர்கள் அவர்களது பெற்றோர் பற்றி குசலம் விசாரிக்க தவறுவதில்லை. இந்த விஷயத்தில் அதிகமாக குசலம் விசாரிக்கப்பட்டிருப்பவர் ஸ்ருதி ஹாசன். இப்போதெல்லாம் யாராவது அவரிடம், ‘அப்பா (கமல்) எப்படி இருக்கிறார்‘ என்று கேட்டால் ‘அவரிடமே கேளுங்கள்‘ என்று வெடுக்கென பதில் அளிக்கிறாராம். ‘இது உண்மையா?‘ என்று ஸ்ருதியிடம் கேட்டபோது கூறியது: ‘ஒவ்வொரு முறையும் என்னை சந்திப்பவர்கள் கேட்கும் முதல் கேள்வி, 'அப்பா எப்படி இருக்கிறார்?‘ என்பதுதான். அதன்பிறகு, ‘உங்களைப்பற்றி அவர் என்ன நினைக்கிறார்?‘ என்பார்கள்.

இதற்கு பதில் அளித்து ஓய்ந்துவிட்டேன். இப்போதெல்லாம் அதுபோல் யாராவது கேட்டால் பதில் சொல்வதற்கு வார்த்தை கிடைக்காமல் தடுமாறுகிறேன். எனவே யாராவது, ‘அப்பா எப்படி இருக்கிறார்?' என்று கேட்டால், ‘எனக்கு தெரியாது அவரிடம் கேளுங்கள்‘ என்று கூறிவிடுகிறேன்.ஆனால் ஒருமுறை இந்தி நடிகர் ரிஷிகபூர் என்னிடம் அதே கேள்வியை கேட்டபோது அந்த கேள்வியின் ஆழம் புரிந்தது. இனிமேல் அந்த கேள்வியை வாழ்நாள் முழுவதும் யாராவது ஒருவர் என்னிடம் கேட்டுக்கொண்டே இருக்க வேண்டும் என்று தோன்றுகிறது.  என் தந்தையை எண்ணி பெருமைப்படுகிறேன். அவரது கடினமான உழைப்புதான் என்னை அடையாளம் காட்டி இருக்கிறது.இவ்வாறு உருக்கமாக கூறினார். 


0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top