↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பில் தற்கொலைப் படை தாக்குதலில் ஈடுபட்டு பலியான 14 வயது சிறுவனின் புகைப்படம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஈராக் மற்றும் சிரியாவின் பல்வேறு பகுதிகளை கைப்பற்றி தனி இஸ்லாமிய தேசத்தை உருவாக்கிய ஐ.எஸ்.ஐ.எஸ், தங்களது அமைப்பில் பல நாடுகளை சேர்ந்த சிறுமிகள் மற்றும் சிறுவர்களை புனிதப் போர் என்ற பெயரில் மூளைச்சலவை செய்து சேர்த்து வருகிறது.
இந்நிலையில் அந்த அமைப்பை சேர்ந்த (Abu al-Hassan al-Shami)14 வயது சிறுவன் ஒருவன், தற்கொலைப்படை தாக்குதலில் ஈடுபட்டுள்ள புகைப்படம் இணையதளத்தில் வெளியானது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த புகைப்படத்தில் லொறியில் துப்பாக்கியை ஏந்தியபடி அச்சிறுவன் அமர்ந்திருக்கிறான்.
அந்த லொறியின் பின்புறத்தில் நிரப்பபட்டிருக்கும் வெடிகுண்டுகள், திடீரென வெடிப்பதில் அச்சிறுவனும் பலியாகிறான்.
இச்சம்பவம் ஈராக்கின் சமரா (Samara)நகரத்தில் நடந்ததாக கூறப்படுகிறது. மேலும் சிறுவனின் துணிச்சலை தீவிரவாதிகள் பாராட்டி உள்ளனர்.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top