↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
ஜே எஸ் கே  பிலிம் கார்பரேஷன் நிறுவனமும், ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’, ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ ஆகிய படங்களை தயாரித்த லியோ விஷன்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கும் படம் ‘நாலு போலிசும் நல்லா இருந்த ஊரும்’.
இதில் நாயகனாக அருள்நிதி நடிக்க, அவருக்கு ஜோடியாக ரம்யா நம்பீசன் நடித்திருக்கிறார். அறிமுக இயக்குநரான ஸ்ரீகிருஷ்ணா இந்தப் படத்தை இயக்கியுள்ளார். இந்தப் படத்திற்கு சென்சாரில் ‘யு’ சான்றிதழ் கிடைத்திருப்பது படத்தின் தயாரிப்பாளர்களை சந்தோஷப்படுத்தியுள்ளது.
இந்தப் படம் பற்றி பேசிய தயாரிப்பாளர் ஜெ.சதீஷ்குமார், “இன்றைய காலக் கட்டத்தில் ஒரு திரைப்படத்திற்கு ‘யு’ சான்றிதழ் பெறுவது மிக, மிக முக்கியம். மகிழ்ச்சிகரமானதும்கூட. எங்களுடைய லட்சியமே எல்லா தரப்பு மக்களையும் சென்று அடையும் வகையில் நல்ல படங்களை தயாரிக்க வேண்டும் என்பதுதான்.
அருள்நிதி இந்த படத்தில் போலீஸ் வேடத்தில் நடித்திருக்கிறார். அபாரமான, துடிப்பான நடிப்பை இந்தப் படத்தில் வெளிப்படுத்தி இருக்கிறார் அருள்நிதி. அவருக்கு இணையாக நடித்திருப்பவர் ரம்யா நம்பீசன். நடிகர்கள் சிங்கம்புலியும், ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ படத்தின் மூலம் பேசப்பட்ட பகவதி பெருமாளும் மிக சிறந்த கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
‘நாலு போலிசும் நல்லா இருந்த ஊரும்’ ரசிகர்கள் இடையே சிரிப்பு வெடி வெடிக்க செய்யும். வரும் பொங்கலன்று இந்தப் படத்தின் முன்னோட்டம் வெளியாகும்..” என்றார்.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top