↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad பார்த்திபனின் 'கதை திரைக்கதை வசனம் இயக்கம்' படத்தில் நடித்த நடிகை அகிலா கிஷோர் அஜீத்துடன் நடிக்க வேண்டும் என்ற தனது விருப்பத்தை பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

பெங்களூரில் சின்ன வயதாக இருக்கும்போது அஜீத்தின் 'கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்' படத்தை பார்த்து அவருடைய ரசிகையாக மாறியதாகவும், அதுமுதல் கல்லூரியில் படிக்கும் வரை அஜீத்தின் படத்தை முதல் நாளே பார்த்துவிடுவதாகவும் கூறினார்.,

மேலும் 5அடி 8அங்குலம் உயரமுள்ள அவர் கல்லூரியில் படிக்கும்போது பேஸ்கட் பால் வீராங்கனையாக இருந்ததாகவும், என்னுடைய உயரம் ஒன்றே அஜீத்துடன் நடிக்க போதுமான தகுதி என்று அவர் கூறியுள்ளார்.

அஜீத்தின் காதலியாக நடிக்க வேண்டும் என்பதே தனது ஆசை என்றும் கூறிய அவர் சீயான் விக்ரமும் தனக்கு மிகவும் பிடித்த நடிகர் என்று கூறினார்.

தற்போது மூன்றாம் உலகப்போர் என்ற படத்தில் நடித்து வரும் அகிலா கிஷோர், அடுத்த அஜீத் படத்தில் ஒப்பந்தம் ஆவாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.



0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top