↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad ஹீரோயின்களுடன் நெருக்கமாக நடிக்கக்கூடாது என்று மனைவி போட்ட கண்டிஷன் நீடிக்கிறது என்றார் இசை அமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ். இதுபற்றி அவர் கூறியது:
இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் என்னை ஹீரோவாக அறிமுகப்படுத்த இருந்தார். அப்படம் டிராப் ஆகிவிட்டதால் ‘பென்சில்‘ படத்தில் ஹீரோவாக நடிக்கிறேன். இதன் படப்பிடிப்பில் 3 மாதம் இடைவெளி ஏற்பட்டது. அப்போது தாடி வளர்த்தேன். அந்த தோற்றத்தில் என்னை பார்த்த தயாரிப்பாளர் ஞானவேல் பேய் படமொன்றில் ஹீரோவாக நடிக்க கேட்டார். ஓ.கே. சொன்னேன். தெலுங்கில் வெளியாகி ஹிட்டான ‘பிரேம கதா சித்ரம்‘ படம் தமிழில் ‘டார்லிங்‘ என்ற பெயரில் உருவாகிறது. இதில்தான் தற்போது நடித்துள்ளேன். சாம் ஆண்டன் இயக்குகிறார்.

இசை பொறுப்பை நானே ஏற்றிருக்கிறேன். நிக்கி கல்ராணி, சிருஷ்டி டாங்கே ஹீரோயின்கள். பொங்கல் தினத்தில் இப்படம் ரிலீஸ் ஆகிறது. இப்படத்தின் டிரெய்லரை பார்த்து ஏ.ஆர்.ரஹ்மான் உள்ளிட்ட பலர் எனக்கு வாழ்த்து சொன்னார்கள்.‘நடிக்க வந்ததால் இசை அமைக்க மாட்டீர்களா?' என்கிறார்கள். இரண்டு பொறுப்பிற்கும் தனித்தனியாக நேரம் ஒதுக்கியே செய்கிறேன். தற்போது 10 படங்களுக்கு இசை அமைத்து வருகிறேன். ஹீரோயின்களுடன் நெருக்கமாக நடிக்கக்கூடாது, முத்தக்காட்சியில் நடிக்கக்கூடாது என்று என் மனைவி சைந்தவி போட்ட கண்டிஷன் நீங்கிவிட்டதா என்கிறார்கள். அந்த கண்டிஷன் அப்படியேதான் இருக்கிறது. இவ்வாறு ஜி.வி.பிரகாஷ் கூறினார். 



0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top