↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
நடிகை நதியா 1980-90களில் முக்கிய நாயகியாக திகழ்ந்தவர். பெண்கள் மத்தியில் அவருக்கு பெரிய வரவேற்பு இருந்ததால் அவரது பெயரிலேயே நதியா வளையல், நதியா கம்மல் என்று அழகு சாதனப் பொருட்களுக்கு அவரது பெயரை வைத்தனர்.

மேலும், இவர் முன்னணி ஹீரோக்களின் படமாக இருந்தாலும் கிளாமராக நடிக்க மாட்டேன் என்று கண்டிசன் போட்டு அந்த காலகட்டத்தில் நடித்து வந்தார். ஆனால் திருமணத்திற்கு பிறகு சிலகாலம் சினிமாவில் இருந்து வெளியேறினார். பின்பு ஜெயம்ரவி நடித்த எம்.குமரன் சன் ஆப் மகாலட்சுமி படத்திலிருந்து மறுபிரவேசம் செய்தார்.

இதனை தொடர்ந்து தாமிரபரணி, பட்டாளம் ஆகிய படங்களிலும் நடித்துள்ளார். ஆனால் தொடர்ந்து தமிழில் நதியாவுக்கு வாய்ப்புகள் இல்லாததால் மலையாளம், தெலுங்கு என்று நடித்து வந்தார்.

தெலுங்கு ரீமேக்கில் த்ருஷ்யம் என்ற படத்தில் கீதா பிரபாகர் என்ற போலீஸ் வேடத்தில் அசத்தலாக நடித்திருந்தார். ஆனால் அதையடுத்தும் அவர் தொடர்ந்து கதைக்கு முக்கியத்துவம் உள்ள கேரக்டர்களில் மட்டுமே நடிப்பேன் என்பதில் உறுதியாகவும் இருந்து வருகிறாராம்.

இந்தநிலையில் சமீபத்தில் ஒரு தெலுங்கு டைரக்டர், ஐம்பது வயது பெண்ணாக அதாவது நரை முடி தலையுடன் நடிக்க வேண்டும் என்று நதியாவை அழைத்தபோது செம கோபமாகி விட்டாராம்.

என்னதான் எனக்கு 48 வயது ஆனபோதும், இப்போதும் நான் எனது உடல்கட்டை இளவட்டமாகவே பராமரித்து வருகிறேன். காரணம் இளமையான வேடங்களில் நடிக்க வேண்டும் என்பதற்காகத் தான். அதனால் எனது ஒரிஜினல் வயதை வெளிப்படுத்தும் வேடங்களில் ஒருநாளும் நான் நடிக்க மாட்டேன் என்று அந்த வாய்ப்பை தட்டிக்கழித்து விட்டாராம்.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top