↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad பஞ்சாப் அணிக்கு எதிரான ஐபிஎல் லீக் போட்டியில் ராஜஸ்தான் வீரர்கள் டிம் சவுத்தி, கருண் நாயர் பிடித்த கேட்ச் ரசிகர்களை வாய்பிளக்க வைத்துள்ளது.
நேற்று புனேவில் நடந்த ஆட்டத்தில் ராஜஸ்தான் றொயல்ஸ் அணி 162 ஓட்டங்கள் எடுத்தது. அடுத்து விளையாடிய பஞ்சாப் அணி 136 ஓட்டங்கள் மட்டுமே எடுத்து, 26 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
இதில் ராஜஸ்தான் அணியின் இலக்கை விரட்டும் போது பஞ்சாப் அணி வீரர் ஜார்ஜ் பெய்லி அதிரடியாக ஆடிக்கொண்டிருந்தார். அவர் 24 ஓட்டங்கள் எடுத்திருந்த போது பந்தை சிக்சர் நோக்கி அடித்தார்.
பந்து பவுண்டரி எல்லையை கடக்க போகும் சமயத்தில் டிம் சவுத்தி அபாரமாக பந்தை அந்தரத்தில் தடுத்து எல்லைக் கோட்டுக்குள் தள்ளி விட்டார்.
அப்போது டிம் சவுத்தி பின்னாலயே ஓடி வந்து கொண்டிருந்த கருண் நாயர் மிக அழகாக பந்தை கேட்ச் பிடித்தார்.
பெய்லியின் விக்கெட் தான் ராஜஸ்தான் றொயல்ஸ் அணியின் வெற்றிக்கு முக்கிய திருப்பமாக அமைந்தது.
பல கேட்ச்கள் ஐபிஎல் தொடரில் அரங்கேறி இருந்தாலும், இந்த சிறந்த கேட்ச் ரசிர்களை வியக்க வைத்துள்ளது.


0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top