
அண்மையில் ஸ்ருதிஹாசன் விமானத்தில் பயணம் செய்துகொண்டிருந்த போது, ஆந்திர அமைச்சருடன் தகராறு ஏற்பட்டதாக செய்திகள் பரவியது.
இச்செய்திக்கு சம்பந்தப்பட்ட ஆந்திர அமைச்சர் கெம்மனேனி ஸ்ரீனிவாஸ் விளக்கம் அளித்துள்ளார்.
அவர் கூறியிருப்பதாவது, நான் ஐதராபாத்திலிருந்து திருப்பதிக்கு விமானத்தில் சென்றபோது எனது முன் இருக்கையில் ஸ்ருதிஹாசன் அமர்ந்திருந்தார். அப்போது எனக்கு செல்போனில் முக்கிய எஸ்.எம்.எஸ் வந்திருந்தது.
அது அவசரமான செய்தி என்பதால் சம்பந்தப்பட்டவர்களிடம் போனில் பேசினேன். சரியான சிக்னல் இல்லாததால் நான் சத்தமாக பேசினேன். நான் பேசியது கண்டிப்பாக ஸ்ருதிஹாசனுக்கு தொந்தரவாக இருந்திருக்ககூடும்.
அவர் சைகையில் மெதுவாக பேசுங்கள் என்று கூற, நானும் சைகையில் கொஞ்சம் பொறுத்துக் கொள்ளுங்கள் என்று கூறினேன். பின் அவர் பணிப்பெண்ணிடம் புகார் செய்தார், எனவே நான் இணைப்பை துண்டித்து விட்டேன்.
இதுதான் நடந்தது, எனக்கும் ஸ்ருதிஹாசனுக்கும் எந்த தகராறும் நடக்கவில்லை என்று கூறினார்.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.