ஆஸ்கர் நிறுவனம் ரவிச்சந்திரன் தயாரிப்பில் ஜெயம் ரவி, த்ரிஷா நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘பூலோகம்’. படம் முடிந்து பல காலங்கள் ஆகியும் இன்னமும் வெளிவராமல் இருக்கிறது.
இத்திரைப்படத்தை வெளியிடுவதற்கு அனுமதிக்கக்கூடாது என்று இந்தியன் ஓவர்சீஸ் வங்கி வழக்கு தொடர்ந்துள்ளது. இந்த படத்தை தியேட்டர்களில் வெளியிடவோ, ஆடியோ காப்பிகள் எடுக்கவோ, டி.வி. மற்றும் சேனல்களில் வெளியிடவோ கடன் வசூலிக்கும் தீர்ப்பாயம் இடைக்கால தடை விதித்துள்ளது.

ஆஸ்கர் நிறுவனத்துக்கு இந்தியன் ஓவர்சீஸ் வங்கி வழங்கிய கடன் தொடர்பாக தொடுத்திருந்த வழக்கை விசாரித்து இந்த இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே ஆஸ்கர் வெளியீட்டில் வந்த ‘ஐ’ படம் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் கடன் பெற்று தயாரித்த படம். அப்போது வங்கியின் ஒப்புதல் பெறாமலேயே ‘ஐ’ படம் வெளிவந்ததால், தற்போது கோர்ட் மூலம் ’பூலோகம்’ படத்திற்கு தடை பெற்றுள்ளது இந்தியன் ஓவர் சீஸ் வங்கி.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.