↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
இசையமைப்பாளர் சக்ரியை விஷம் வைத்து கொலைசெய்து விட்டனர் என்று அவரது மனைவி புகார் அளித்துள்ளார்.
பிரபல இசையமைப்பாளரும், தெலுங்கு பாடகருமான சக்ரி கடந்த மாதம் மரணம் அடைந்தார்.
மாரடைப்பு காரணமாக அவர் உயிர் பிரிந்ததாக கூறப்பட்டது.
இப்போது அவரது மரணத்தில் மர்மம் இருப்பதாகவும், விஷம் கொடுத்து அவர் கொலை செய்யப்பட்டு இருப்பதாக சந்தேகிப்பதாகவும் சக்ரி மனைவி ஸ்ராவனி ஜதராபாத் ஜூப்லிஹில்ஸ் பொலிசில் புகார் கொடுத்துள்ளார்.

புகார் மனுவில் அவர் கூறியிருப்பதாவது:–
நான் எனது கணவர் மாமியார் வித்யாவதி மற்றும் மைத்துனி குடும்பத்துடன் ஜூப்லிஹில்ஸ் ஜார்னலிஸ்ட் காலனியில் குடியிருந்த வந்தேன்.
எனது 2–வது மைத்துனி கிருஷ்ண பிரியா கணவர் ராஜேஸ்வரராவுக்கு வியாபாரத்துக்காக எனது கணவர் சக்ரி ரூ.45 லட்சம் கொடுத்தார். கடந்த நவம்பர் 27ம் திகதி பணத்தை திருப்பி கேட்டார்.
இதனால் எனது மாமியார் கோபம் அடைந்து யூகப் கூடாவில் உள்ள அவரது இன்னொரு மகள் வீட்டுக்கு சென்று விட்டார்.
டிசம்பர் 14–ந்தேதி இரவு எனது மாமியார் அழைத்ததின் பேரில் எனது கணவர் சக்ரி யூகப்கூடா சென்றார். புறப்படும் போது மிகவும் சந்தோஷமாக காணப்பட்டார்.

ஆனால் இரவு 1.30 மணிக்கு வீடு திரும்பிய போது மிகவும் சோர்வாக இருந்தார், சகோதரி வீட்டிலேயே சாப்பிட்டு விட்டதாக கூறினார்.
சொத்து விஷயத்தில் அவர்கள் நெருக்கடி கொடுத்ததாகவும் சொந்தத்தை விட அவர்களுக்கு பணம்தான் முக்கியமாக இருக்கிறது என்று வருத்தப்பட்டு கூறி தூங்கச் சென்றார்.

ஆனால் காலையில் எழுந்திருக்கவே இல்லை. அசைவற்று இருந்த அவரை அப்பல்லோ மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றோம். ஆனால் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் கூறினார்கள்.
எனது கணவர் மறைவுக்கு பிறகு என்னை எனது மாமியாரும், மைத்துனிகளும் சித்ரவதை செய்தார்கள். வீட்டை விட்டு வெளியேறுமாறு மிரட்டினார்கள்.

இவர்களது செயல்பாடுகளை பார்க்கும் போது எனது கணவர் மரணத்தில் மர்மம் இருப்பதாக சந்தேகிக்கிறேன். அவர் விஷம் வைத்து கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்று கருதுகிறேன்.

எங்களுக்கு அரசியல் செல்வாக்கு இருக்கிறது. எங்களை ஒன்றும் செய்ய முடியாது என்று எனது கணவர் குடும்பத்தினர் மிரட்டுகிறார்கள்.
எனது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டு உள்ளது எனது உயிருக்கு ஏதாவது நேர்ந்தால் அதற்கு எனது கணவர் குடும்பத்தினர் தான் காரணமாக இருக்கும். எனது உயிருக்கு பாதுகாப்பு அளிப்பதுடன் எனது கணவரின் மர்ம மரணம் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று கூறியுள்ளார்.
இந்த புகாரின் அடிப்படையில் பொலிசார், ஸ்ராவனியின் மாமியார் வித்யாவதி, மைத்துனர் மகித் என்ற மாதவராஜ், மைத்துனிகள் வானிதேவி, கிருஷ்ண பிரியா இவர்களது கணவர்கள் லட்சுமணராவ், நாகேஸ் வரராவ், உறவினர்கள் ஆதர்ஷினி, காளிகிரி, காளி பிரத்யுக்ஷா ஆகிய 9 பேர் மீது 3 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top