2015-ஆம் ஆண்டிற்கான பல விருதுகளையும் தட்டிச் செல்லப்போகும் நடிகர் தனுஷ் தான் என்று திட்டவட்டமான முடிவில் இருக்கின்றனர் அவரது ரசிகர்கள். பிப்ரவரி 6-ஆம் தேதி ஷமிதாப், பிப்ரவரி 13-ஆம் தேதி அனேகன் என ஒரே மாதத்தில் மிகவும் எதிர்பார்க்கப்படும் தனுஷின் இரண்டு படங்களும் ரிலீஸாகின்றன.
பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் மாரி திரைப்படமும் இந்த வருட இறுதிக்குள் ரிலீஸாகிவிடும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.’ஆப்போனன்டா ஆளே இல்ல சோலோ ஆகிட்டேன்’ என அனேகன் படத்தில் வரும் பாடல்வரிகள் தனுஷுக்காகவே எழுதப்பட்டது என நிரூபிக்கும் வகையில் எந்த படங்களுடனும் போட்டி இல்லாமல் ஷமிதாப், அனேகன் ஆகிய படங்கள் சோலோவாக ரிலீஸ் செய்யப்படுகின்றன.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.