↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad

கடந்த ஞாயிறு அன்று விஜய் நடித்த கத்தி படத்தின் வெற்றி விழா நெல்லையில் மிகவும் பிரமாண்டமாக நடைபெற்றது. இந்த விழாவில் விஜய், சதீஷ் உள்பட படக்குழுவினர் பலர் கலந்து கொண்டனர். இந்த விழாவுக்காக தூத்துக்குடி வரை விமானத்தில் வந்த விஜய், அங்கிருந்து காரில் திருநெல்வேலிக்கு சென்றார். அப்போது அவருடைய காரை விஜய் ரசிகர்கள் பல்வேறு கார்களிலும், மோட்டார் சைக்கிளிலும் பின் தொடர்ந்து வேகமாக வந்து கொண்டிருந்தனர்.

இந்நிலையில் விஜய் ரசிகர் ஒருவர் மோட்டார் சைக்கிளில் தூத்துக்குடியில் இருந்து நெல்லை செல்லும் வழியில் வசவப்பப்புரம் என்ற இடத்தில் விஜய்யை பின் தொடர்ந்து மிக வேகமாக வந்துகொண்டிருந்தபோது திடீரென நிலைதடுமாறி சாலையில் கீழே விழுந்தார். அதே மோட்டார் சைக்கிளில் வந்த இன்னொரு ரசிகர் உள்பட இருவரும் பலத்த காயமடைந்தனர்.

பலத்த காயமடைந்த இசக்கிமுத்து மற்றும் சுந்தர் ஆகிய இருவரும் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கபப்ட்டனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.  இந்த விபத்து குறித்து முறப்பநாடு காவல்நிலைய ஆய்வாளர் பெர்னாண்டோ சேவியர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

மேலும் விஜய் பேசிய கூட்டத்தில் நடந்த தள்ளுமுள்ளு காரணமாக லேசான தடியடி நடந்ததாக கூறப்படுகிறது. அப்போது ஒரு ரசிகர் நாற்காலியை தூக்கி எறிந்ததில் 5வயது சிறுமி ஒருவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.

இதனால் விஜய் பெரும் மன உளைச்சலுக்கு ஆளானார்....!

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top