↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad இந்திய சினிமா என்றாலே முதலில் நம் நினைவிற்கு வருவது பாடல்கள் தான். அந்த வகையில் 1955ம் ஆண்டு டிசம்பர் 1ம் தேதி நேபாளில் பிறந்து இந்தியா முழுவது உள்ள பிரபலமான அனைத்து மொழிகளிலும் பாடி ரசிகர்களை கவர்ந்தவர் உதித் நாரயணன்.’யாம் அறிந்த மொழிகளில் தமிழ் மொழி போல் உண்டோ’ என்று கூறியவர் பாராதியார். 

அப்படிப்பட்ட அழகு தமிழை, தனக்கென ஒரு ஸ்டையிலில் பாடி அதையே தமிழ் மக்களையும் பாட வைத்தவர் தான் இந்த உதித் நாரயணன்.இவர் தமிழ் சினிமாவில் முதன் முறையாக காதலன் படத்தில் தான் அறிமுகமானர். அதை தொடர்ந்து முத்து, மிஸ்டர்.ரோமியோ, ரன், கில்லி, குருவி, ஆஞ்சனேயா, ஆதலால் காதல் செய்வீர், காதல் சொல்ல வந்தேன், சிவகாசி, மதுர, சமர் என கிட்டத்தட்ட 50 பாடல்களுக்கு மேல் பாடியுள்ளார்.

இளைய தளபதி விஜய் என்றால் இவருக்கு கொஞ்சம் ஸ்பெஷல், அவருக்கு மட்டும் குறைந்தது 6 பாடல்களை பாடியுள்ளார். அதேபோல் விஜய்க்கும், உதித் என்றால் மிகவும் இஷ்டம். இவர் இதுவரை ஹிந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், நேபாள், ஒரியா என அனைத்து மொழிகளிலும் பாடி இந்தியாவிற்கு பெருமை சேர்த்தவர்.இவரை கௌரவிக்கும் விதமாக இந்திய அரசு பத்மஸ்ரீ விருதை வழங்கியுள்ளது. 

இது மட்டுமில்லாமல் சிறந்த பாடகருக்காக தற்போது வரை 3 தேசிய விருதை பெற்றுள்ளார். இவரில் குரல் இன்று போல் என்றும் இனிமையாக நம் செவிக்கு மருந்திட வேண்டும். இந்த மகா கலைஞனுக்கு ‘சினி உலகம்’ சார்பாக பிறந்த நாள் வாழ்த்துக்கள். 


0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top