↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓
click this ad
அன்பே வா - எம்.ஜி.ஆர். , சரோஜாதேவி நடித்த இந்த படத்தை நீண்ட இடைவேளைக்கு பின்னர் ஒரு தொலைக்காட்சியில் சமிபத்தில் மீண்டும் பார்த்தேன்.
படத்தில், பங்களாவின் உரிமையாளரே எம்.ஜி.ஆர்தான் என்று அங்கு வேலை செய்யும் மனோரமாவிற்கு தெரியும். ஆனால், இந்த உண்மை தெரியாமல் அவரிடமே வாடகை வசூலிப்பார் நாகேஷ். நாகேஷிடம் உண்மையை சொல்லவும் முடியாமல், மெல்லவும் முடியாமல் மனோரமா படும் அவஸ்தைகள் படத்தின் ஹைலைட்.
அன்பே வா - மனோரமா அவர்களை பற்றிய பல நினைவுகளை எனக்கு கிளறிவிட்டது.
நடிகர் திலகம் சிவாஜியுடன் மனோரமா என்று பார்த்தால், 'தில்லானா மோகனாம்பாள்' படத்தில் "ஜில் ஜில் ரமாமணி" என்ற நாடகநடிகையாக வந்து குரலில் காட்டும் குழைவும், நடிப்பில் அவர் காட்டும் நளினமும் மறக்கமுடியுமா?
ரஜினி அவர்களுடன் "மன்னன்" மற்றும் "எஜமான்" உட்பட பல படங்களில் மனோரமாவின் பங்களிப்பை பற்றி குறிப்பிட்டு சொல்லமுடியும்.
கொஞ்ச காலம் முன்புவரை மனோரமா அவர்கள் இல்லாத கமல்ஹாசன் படங்களே இல்லை என்று கூறலாம். "ஐயோ அய்யய்யோ" என்று 'அபூர்வ சகோதரர்கள்' படத்தில் போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்று ஜனகராஜ் கோஷ்டியை அதகளம் பண்ணும் காட்சி ஒன்றே போதும். மனோரமா அவர்களின் நடிப்பு திறமைக்கு.
அவர் செய்த வேடங்களில் எனக்கு தனிப்பட்ட முறையில் எனக்கு மிகவும் பிடித்தது....வயதான பாட்டுவாத்தியார் கெட் அப்பில் வரும் சத்யராஜை ஜொள்ளுவிடும் 'முதிர்கன்னியாக' அவர் அசத்தி இருந்த "நடிகன்" தான்.
பாசமிக்க பணக்கார பாட்டியாக 'பாட்டி சொல்லை தட்டாதே, தெற்றுபல் கிழவியாக ''சின்ன கவுண்டர்' இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம்தானே.
உலக சினிமாவில் சுமார் 1000 படங்களுக்கும்மேல் நடித்து கின்னஸ் சாதனை படைத்த மனோரமா அவர்கள் இப்போது என்ன செய்கிறார்?
சில மாதங்களுக்கு முன்னால் 'குமுதம்' பத்திரிக்கையில் அவரை பற்றிய ஒரு வேதனையான செய்தியை பார்த்தேன்.அதில், மனோரமா அவர்கள் இரண்டு கால்களும் முடங்கி, ஆறு மாதத்திற்கும் மேலாக படுத்தபடுக்கையாய் இருப்பதாக தெரிந்தது. பின்பு டிஸ்சார்ஜ் ஆன செய்தியும் வந்தது.
மருத்துவமனையில் தான் சேர்ந்தபோது கமல் போன்ற ஒரு சிலரே வந்து பார்த்ததாகவும், பின்னர் யாரும்வந்து நலம்கூட விசாரிக்கவில்லை என்றும் கண்ணிருடன் அந்த பேட்டியில் தெரிவித்து இருந்தார் மனோரமா.
உள்ளதை சொல்கிறேன். இவரை போன்ற ஒரு நடிகை கேரளாவில் இருந்து இருந்தால், கலைபொக்கிஷமாக மதித்து கொண்டாடிஇருப்பார்கள்.
தமிழ் திரையுலகின் நன்றிகெட்டத்தனங்களுக்கு கணக்கில் அடங்கா உதாரணங்கள் இருக்கின்றன. " அடிப்படையான நாகரிக இயல்புகள் கூட திரையுலகில் இருப்பதாக தெரியவில்லை" என்று 'ஒ' பக்கங்களில் திரு.ஞானி அவர்கள் ஒரு முறை எழுதியது என் நினைவுக்கு வந்தது.
மீண்டும் மனோரமா அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டு இருப்பதாக தெரிகிறது. இந்தமுறை அவரது அருகில் அவர் குடும்பத்தினர் கூட இல்லை என்று தெரியவந்து இருக்கிறது.
உலக சாதனை செயத நடிகை, இறுதி நாட்களில் இப்படி யாருமற்ற அனாதையாக இருப்பதை என்னவென்று எழுதுவது??
அவர் பூரணநலம் அடைந்துவிடுவரா?
தான் பங்கேற்ற கதாபாத்திரங்கள் மூலம், நம் தமிழ் குடும்பங்களில் ஒரு உறவாகவே ஆனவர் நடிகை மனோரமா அவர்கள்.
இனி வரும் திரைப்படங்களில், அவரது கனிவான குரலை கேட்கவே முடியாதா?
பண்பட்ட அவரது நடிப்பை இனி நம்மால் காணவே முடியாதா? போன்ற கேள்விகள் என் மனதை கனக்க செய்தன.
ஆச்சி மனோரமா, எங்கு இருக்கிறீர்கள்? எப்படி இருக்கிறீர்கள்?
Home
»
»Unlabelled
» 'ஆச்சி' மனோரமாவைத் தேடி.....
Recent Posts
மற்றுமொரு பிரபல நடிகையின் நிர்வாண வீடியோ வெளியானது – அல்லாடும் திரையுலகம் (வீடியோ இணைப்பு)
அண்மைக் காலமாக பிரபல நடிகைகளின் நிர்வாண படங்கள், வீடியோக்கள் வெளிவந்து அதிர்ச்சி மேல் அதிர்ச்சி தந்[...]
Vadivelu abusing that Psycho
Vadivelu casting recent film Eli the film is very negative reviews met varukinratumunpu as Vad[...]
Ajith and Vijay fans did great job
Tamil Cinema No. 1 on the spot to Vijay, Ajith both the heavy competition, but they screen onl[...]
விஜயே கூப்பிட்டாலும் அவரை வைத்து படமெடுக்கமாட்டேன் - விஜய் ரசிகருக்கு முகத்தில் அடித்தாற்போல் பதில் கூறிய சீனு ராமசாமி
சமூக வலைத்தளங்களில் சினிமா பிரபலங்கள் என்றாலே மிகவும் பார்த்து தான் பேச வேண்டும் போல, ஒரு வார்த்[...]
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.