ரஜினி, கே.எஸ்.ரவிக்குமார் கூட்டணியில் உருவாகியுள்ள படம் லிங்கா. இந்த படம் ரஜினியின் பிறந்த நாளான டிசம்பர் 12ம் தேதி ரிலீஸாக தயாராகி வருகிறது.
இந்நிலையில் ரஜினி அரசியல் பற்றி பேசி பரபரப்பை ஏற்படுத்தி விளம்பர தேடிக்கொள்கிறார் என சிலர் முணுமுணுக்க ஆரம்பித்துள்ளனர். இதற்கு கே.எஸ்.ரவிக்குமார் பதிலளித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது, ”நம்மாளுங்க எதையும் தப்பான ஆங்கிள்லதான் பார்ப்பாங்களா? ‘சிவாஜி’, ‘எந்திரன்’ படங்கள் வெளியானப்போ ரஜினி சார் பரபரப்பா ஏதாவது பேசினாரா? இல்லையே! அந்த இண்டு படங்களும் வசூலை வாரிக் குவித்ததே.
தன் பட ரிலீஸுக்கு முன்னாடி அரசியல் பேசி, பரபரப்பு கிளப்பி, விளம்பரம் தேடும் நிலைமை ரஜினி சாருக்கு எப்போதும் இல்லை. அமிதாப் பச்சனே ‘என் படங்களுக்கு வேண்டுமானால் விளம்பரம் தேவைப்படலாம். ஆனால், ரஜினி படத்துக்கு விளம்பரம் தேவையே இல்லை’ என்று கூறியிருக்கிறார். இதுக்கு மேல் நான் என்ன சொல்ல வேண்டும் என்று கூறியுள்ளார் கே.எஸ்.ரவிக்குமார்.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.