மதிமுக பொதுச் செயலாளர் வைகோவை பாதுகாப்பாக வீடு திரும்ப முடியாது என்று பேசி சர்ச்சையில் சிக்கியுள்ள பாஜகதேசியச் செயலாளர் எச். ராஜா மீது வேறு இரு புகார்களில் சென்னை போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
சமீபத்தில் வைகோவை கடுமையாக எச்சரித்தும், மிரட்டியும் பேசி சர்ச்சையில் சிக்கினார் எச்.ராஜா. அவரது பேச்சுக்குஅனைத்துக் கட்சித் தலைவர்களும் கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர்.
இந்த நிலையில் எச். ராஜா மீது சென்னையில் திடீரென 2 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்துள்ளனர் போலீஸார். திராவிடர்கழகத் தலைவர் கலி பூங்குன்றன் அளித்த புகாரின் பேரில் இந்த வழக்கை போலீஸார் பதிவு செய்துள்ளனர்.
கடந்த ஜனவரி மாதம் சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே நடந்த பாஜக கூட்டத்தில் பேசிய ராஜா, தந்தை பெரியாரைதரக்குறைவாக பேசியதாக புகார் கொடுக்கப்பட்டிருந்தது.
அதேபோல சீமான் உள்பட பிற மதத்தினரை அவதூறாக பேசியதாகவும் எச். ராஜா மீது புகார் கூறப்பட்டிருந்தது. அந்தப்புகார்களின் பேரில் இரு பிரிவுகளில் தற்போது வழக்குப் போட்டுள்ளனர் போலீஸார்.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.