சக நடிகைகளுடன் நெருங்கி பழகுவதால் நீண்ட காதலர்களாக வலம் த்ரிஷா, ராணா இருவரும் பிரிந்தனர். அதன் பிறகு ராணாவும் அவரை கண்டுக்கொள்ளவில்லை. த்ரிஷாவும் தயாரிப்பாளர் வருண் மணியனுடன் நிச்சயதார்த்தம் செய்து கொண்டதாக ஆதாரங்களுடன் செய்தி வெளியாகியது.
ஆனால் த்ரிஷா இதை திட்டவட்டமாக மறுத்து வருகிறார். அஜித்துடன் நடித்துள்ள என்னை அறிந்தால் படம் ரிலீஸாகும் நேரத்தில் இது போன்ற தகவல் வெளியாகினால் அது இந்த படத்திற்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று படக்குழுவினர் எதிர்ப்பு தெரிவித்தால்தான் த்ரிஷா வருண் மணியன் விஷயத்தை முடி மறைப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் வருண் மணியன் பெயரை குறிப்பிட்டு முதல்முறையாக டுவிட்டரில் தனது கருத்தை எழுதியிருக்கிறார் த்ரிஷா.
அதில், ‘காவியத்தலைவன் படம், அந்த பட குழுவினரின் புத்திசாலித்தனமான முயற்சி. அற்புதமான நடிப்பு. சினிமா விரும்பிகள் கண்டிப்பாக பார்க்கவேண்டிய படம். இந்த படத்தை வழங்கியதற்காக வருண் மணியனுக்கு நன்றி’ என குறிப்பிட்டிருக்கிறார். படத்தின் இயக்குனரை கூட பாராட்டாத த்ரிஷா வருண் மணியனை பாராட்டியிருப்பது த்ரிஷாவுக்கும் வருணுக்கும் உள்ள நெருக்கத்தையே மேலும் உறுப்படுத்தியிருப்பதாக கோடம்பாக்க வட்டாரம் கிசுகிசுக்கிறது.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.