↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
தன்னால் ஒரே நேரத்தில் 20 தோசை சாப்பிட முடியும்என்றும், அதே சமயம் தனது ஆக்ஷன் ஜாக்சன் ஹீரோஅஜய் தேவ்கன் சாப்பிடுவதில் ஆர்வம் இல்லாதவர்என்றும் பிரபுதேவா தெரிவித்துள்ளார்.

 அஜய் தேவ்கன், சோனாக்ஷி சின்ஹாவை வைத்துபிரபுதேவா இயக்கியுள்ள ஆக்ஷன் ஜாக்சன் படம் இன்றுரிலீஸாகியுள்ளது. இந்த படத்திற்காக அஜய் மற்றும்சோனாக்ஷி உடல் எடையை குறைத்துள்ளனர்.

மகேஷ் பாபு நடித்த தெலுங்கு சூப்பர் ஹிட் படமானதூக்குடுவின் இந்தி ரீமேக்கான ஆக்ஷன் ஜாக்சன்நன்றாக உள்ளது என்று சிலரும், அய்யோ சாமிமுடியலடா என்று சிலரும் விமர்சித்துள்ளனர்.

இந்நிலையில் தனக்கும், அஜய் தேவ்கனுக்கும்இடையே உள்ள ஒற்றுமை மற்றும் வித்தியாசம் பற்றிபிரபுதேவா கூறுகையில், எனக்கு சாப்பாடு என்றால்பிடிக்கும். அஜய்க்கு சாப்பாட்டில் ஆர்வம் இல்லை.இரவு நேர உணவாக சாக்லேட்டை மட்டுமே என்னால்சாப்பிட முடியும்.

நான் ஒரே நேரத்தில் 15 முதல் 20 இட்லி அல்லது தோசை சாப்பிடுவேன். எனக்கு கேக், இனிப்புகள் என்றால் மிகவும்பிடிக்கும். போர் அடிக்கும் வரை என்னால் சாப்பிட முடியும்.

அஜய் சாரின் பிறந்தநாள் ஏப்ரல் 2, என் பிறந்தநாள் ஏப்ரல் 3. நான் டான்ஸ் மாஸ்டரின் மகன். அவர் ஆக்ஷன் டைரக்டரின்மகன். நாங்கள் இருவருமே அமைதியானவர்கள், வம்புக்கு போகாதவர்கள் என்றார்.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top