↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
தமிழ் சினிமா உலகில் தனக்கென ஒரு அசைக்க முடியாத இடத்தை பிடித்துள்ள அஜீத், ரியல் வாழ்க்கையில் ஒரு ரேஸ்மேன் என்பது அனைவரும் அறிந்ததுதான். ஆனால் பலருக்கு தெரியாத ஒரு விஷயம் அஜீத் ஒரு நல்ல விவசாயி என்பதுதான்.

திருவான்மியூரில் தனக்கு சொந்தமான பங்களாவில் பலவகையான செடிகளை வளர்த்து வருகிறார். சென்னையில் இருக்கும் நேரங்களில் அவரே தன் கைப்பட தண்ணீர் ஊற்றுவதை வழக்கமாக கொண்டுள்ளார். இந்த செடிகளுக்கெல்லாம் செயற்கை உரங்கள் பயன்படுத்தாமல் இயற்கை உரங்களையே பயன்படுத்துவதான் அஜீத் விவசாயத்தின் ரகசியம்.

மேலும் தனது வீட்டின் மொட்டை மாடியில் வீட்டு சமையலுக்கு தேவையான காய்கறிகளுக்கு உண்டான செடிகளை வளர்த்து வருகிறார். மேலும் தனது திரையுலக நண்பர்களுக்கும் இதுகுறித்து விழிப்புணர்ச்சி ஏற்படுத்தி வருகின்றாராம்.

எதிர்காலத்தில் பெரிய அளவில் நிலம் வாங்கி பண்ணை வைக்க வேண்டும் என்பது அஜீத்தின் ஆசையாம். இதற்காக இயற்கை விவசாயம் குறித்த புத்தகங்களை அஜீத் படித்து வருவதாக கூறப்படுகிறது. கூடியவிரைவில் அஜீத் திரையுலகில் இருந்து விலகி புல்டைம் விவசாயியாக மாறினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.


0 comments:

Post a Comment

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top