↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad

அஜீத்தை வைத்து கௌதம் மேனன் இயக்கும் என்னை அறிந்தால் படத்தின் படப்பிடிப்பு வேலைகள் ஓரளவுக்கு முடிந்துள்ளன. முக்கியமான க்ளைமேக்ஸ் காட்சிகள் மட்டும் இன்னும் எடுக்க வேண்டியது உள்ளதாம்.

வழக்கமாக தனது படங்களில் நடிக்கும் ஹீரோக்களிடம் கதை சொல்ல மாட்டார் கௌதம் மேனன். ஆனால் அஜீத்திடம் ஆரம்பத்திலேயே கதையை சொல்லிவிட்டாராம் கௌதம் மேனன். ஆனால் அதிலும் படத்தின் க்ளைமேக்ஸை அஜீத்திடம் சொல்ல வில்லையாம். அஜீத் கேட்ட போது போக போக சொல்கிறேன் என்று கூறியிருக்கிறார்.

தற்போது படம் இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், க்ளைமாக்ஸை சமீபத்தில் தான் அஜீத்திடம் சொன்னாராம். அது அஜீத்துக்கும் ரொம்ப பிடித்து விட்டதாம். க்ளைமேக்ஸ் காட்சிகள் பற்றி வெளியில் தெரிய கூடாது என்பதற்காக மிகவும் சீக்ரெட்டாக படமாக்கி வருகிறார் கௌதம் மேனன். 

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top