↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad

பிரதமர் மோடியின் ஆஸ்திரேலிய பயணத்திற்கு முன் மத்திய அமைச்சரவை விரிவுபடுத்தப்படும் என்று கூறப்பட்டு வரும் நிலையில், கோவா முதல்வர் மனோகர் பரிகருடன், கிரிராஜ்சிங், ராம்கிருபால் யாதவ் மற்றும் முக்தர் அப்பாஸ் நக்வி உள்ளிட்ட சிலருக்கும் அமைச்சரவையில் இடம் கிடைக்க கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நிர்வாக வசதிக்காக பிரதமர் நரேந்திரமோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை விரிவுபடுத்தப்பட உள்ளது. தற்போது, அதிக பணிச்சுமை கொண்ட நிதி மற்றும் பாதுகாப்பு துறை அருண் ஜெட்லியிடம் உள்ளது. இந்நிலையில், பாதுகாப்பு துறைக்கு புதிய அமைச்சரை நியமிக்கவும், மேலும் பல துறைகளுக்கு புதுமுகங்களை நியமிக்கவும் பிரதமர் மோடி முடிவு செய்துள்ளார். பிரதமரின் ஆஸ்திரேலிய பயணத்திற்கு முன் மத்திய அமைச்சரவை விரிவுபடுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. continue to read

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top