↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓
click this ad
தமிழகத்தில் உள்ள அரசு அலுவலகங்களில் உள்ள முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் படங்களை அகற்றக்கோரி, மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் கருணாநிதி என்ற தி.மு.க. வழக்கறிஞர் வழக்கத் தொடர்ந்துள்ளார். இந்த வழக்கை விசாரித்த பெஞ்ச், இதுதொடர்பாக விளக்கம் அளிக்குமாறு கூறி தமிழக அரசின் தலைமைச்செயலாளர் மற்றும் மத்திய அரசின் அமைச்சரவை செயலாளர் ஆகியோருக்கு உத்தரவிட்டுள்ளது.
அரசு அலுவலகங்களில் உள்ள முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் படங்களை அகற்ற வேண்டும் என்று மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் ஒருவர் உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார். அவர் பெயர் எஸ் கருணாநிதி. மதுரை கோ புதூரைச் சேர்ந்தவர். மதுரை வக்கீல்கள் சங்க துணைச்செயலாளரான இவர், உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையில் தாக்கல் செய்துள்ள மனு: குடியரசுத் தலைவர், பிரதமர், முதல் அமைச்சர், டாக்டர் அம்பேத்கார், காந்தியடிகள், ஜவகர்லால் நேரு, திருவள்ளுவர், அண்ணா, காமராஜர், ராஜகோபால் ஆச்சாரி, தந்தை பெரியார், முத்துராமலிங்கத் தேவர் ஆகியோரின் உருவப் படங்களை மட்டும் அரசு அலுவலகங்களில் வைத்துக் கொள்ளலாம் என்று தமிழக அரசு ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவுக்குப் புறம்பாக அரசு அலுவலங்களில் ஜெயலலிதா உருவப் படங்கள் வைக்கப்பட்டுள்ளன. தற்போது, ஜெயலலிதா முதல் அமைச்சர் பதவியில் இல்லை. இதுபோன்ற சூழ்நிலையில் அவரது உருவப் படங்களை அரசு அலுவலங்களில் வைத்திருப்பது நியாயமற்றது.
அரசு அலுவலகங்களில் யார், யார் உருவப் படங்களை வைக்கலாம் என்பது தொடர்பான அரசின் உத்தரவை தமிழக அரசு கடைப்பிடிக்கவில்லை. அரசின் திட்டங்களை செயல்படுத்துவது தொடர்பான அறிவிப்புப் பலகைகளில் ஜெயலலிதாவின் பெயர் மற்றும் படங்கள் உள்ளன. அரசுத் திட்டம் தொடர்பான அறிவிப்பு பலகைகளில் உள்ள ஜெயலலிதாவின் பெயர் மற்றும் படங்களை நீக்க வேண்டும் என்றும், அரசு அலுவலங்களில் ஜெயலலிதா படத்தை அகற்ற வேண்டும் என்றும் 31-10-2014 அன்று தமிழக தலைமை செயலாளருக்கு மனு கொடுத்தேன். அவர், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, அரசு திட்டம் தொடர்பான அறிவிப்பு பலகைகளில் ஜெயலலிதாவின் பெயர் மற்றும் படங்களை நீக்கவும், அரசு அலுவலங்களில் ஜெயலலிதா படத்தை அகற்றவும் உத்தரவிட வேண்டும். இந்த மனுவை இன்று விசாரணைக்கு ஏற்ற உயர்நீதிமன்றக் கிளை, இது தொடர்பாக விளக்கமளிக்கும்படி, தமிழக அரசின் தலைமைச்செயலாளர் மற்றும் மத்திய அரசின் அமைச்சரவை செயலாளர் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.
Home
»
jeyalalitha
»
news
»
news.india
» அரசு அலுவலகங்களில் ஜெ. படத்தை நீக்கக் கோரி வழக்கு... அரசுக்கு மதுரை ஹைகோர்ட் பெஞ்ச் நோட்டீஸ்
Recent Posts
முதல்வர் ஓ.பி.எஸ். ராஜினாமா எப்போது?
சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து ஜெயலலிதா விடுதலை செய்யப்பட்ட நிலையிலும் இன்னமும் முதல்வர் ஓ.பன[...]
அப்பீலுக்கு மேலே அப்பீல்: ஜெயாவை பிடித்து உள்ளே போட முயற்சி.... பலிக்குமா முயற்சி?
சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து, ஜெயலலிதா உள்ளிட்ட நால்வரை, கர்நாடக உயர் நீதிமன்றம் விடுதல[...]
கருணாநிதி இல்லத் திருமண விழாவில் கொள்ளையடித்த பலே திருடர்கள்
கடந்த திங்கள்கிழமை (08.06.2015) அன்று சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கத[...]
என் கடைசி மூச்சு வரை காதலனுடன் சேர்ந்து வாழ போராடுவேன்: தற்கொலைக்கு முயன்ற காதலி
சேலம் மாவட்டத்தில் தற்கொலைக்கு முயன்ற பெண் ஒருவர், கடைசி மூச்சு இருக்கும் வரை காதலனுடன் சேர்ந்து வா[...]
பிரதமர் மோடி என்னை விட திறமையான விற்பனையாளர்: மன்மோகன்சிங் அதிரடி
பிரதமர் மோடி தன்னை விட திறமையான விற்பனையாளர் என்று முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் கருத்து தெரிவித்து[...]
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.