↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓
click this ad
உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட கருப்பு பணம் வைத்திருப்போர் பட்டியலில் உள்ள 289 பேரின் கணக்கில் பணமே இல்லை என்ற விவரம் தெரிய வந்துள்ளது. இதனால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியாமல் சிறப்பு புலனாய்வு குழு திணறி வருகிறது.
வெளிநாட்டு வங்கிகளில் இந்தியர்கள் சிலர் பதுக்கி வைத்துள்ள பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய் கருப்பு பணத்தை மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த விசாரணையை மேற்பார்வையிட ஓய்வு பெற்ற நீதிபதிகள் எம்.பி.ஷா, அரிஜித் பசாயத் ஆகியோர் அடங்கிய சிறப்பு புலனாய்வு குழுவை மத்திய அரசு அமைத்தது. அக்குழு, சுப்ரீம் கோர்ட்டின் கண்காணிப்புடன் செயல்பட்டு வருகிறது.
சுவிட்சர்லாந்து நாட்டின் ஜெனீவா நகரில் உள்ள எச்.எஸ்.பி.சி. வங்கியில் கருப்பு பணம் வைத்துள்ள 600-க்கும் மேற்பட்ட இந்தியர்களின் பெயர் அடங்கிய பட்டியல், பிரான்ஸ் நாடு மூலமாக இந்தியாவுக்கு ஏற்கனவே கிடைத்தது. அந்த பட்டியலை உச்சநீதிமன்றம் சிறப்பு புலனாய்வு குழு சமர்ப்பித்துள்ளது. இந்நிலையில், அந்த பட்டியலை ஆய்வு செய்தபோது, பட்டியலில், 289 பேரின் வங்கி கணக்கில் பணமே இல்லை என்று சிறப்பு புலனாய்வு குழு கண்டுபிடித்துள்ளது.
அதிலும், அவர்களில் 122 பேரின் பெயர்கள், அதே பட்டியலில் இரண்டாைவது முறையாக இடம்பெற்றுள்ளன. ஞ மேலும், இந்த கணக்குகளை இயக்கியது தொடர்பாக எந்த விவரங்களும் இல்லை. அந்த கணக்குகள் எப்போது தொடங்கப்பட்டது, எப்போதெல்லாம் பரிவர்த்தனை மேற்கொள்ளப்பட்டது என்பன போன்ற விவரங்களும் இல்லை.
கறுப்புப் பண விவகாரம் குறித்து பல ஆண்டுகளாக பேசிக் கொண்டிருந்த அரசு மிக மிகத் தாமதமாக நடவடிக்கையில் இறங்கியதால், அதற்குள் விழித்துக் கொண்டு கணக்குகளை காலி செய்துவிட்டனர் கறுப்புப் பண முதலைகள். இப்போதைய நிலவரப்படி 300 பேர் மீது மட்டும்தான் இந்த சிறப்புக் குழுவால் நடவடிக்கை எடுக்க முடியும்.
Home
»
news
»
news.india
» கருப்பு பண விவகாரம்: பெயர் பட்டியலில் உள்ள 289 பேரின் கணக்கில் பணமே இல்லையாம்!
Recent Posts
கருணாநிதி இல்லத் திருமண விழாவில் கொள்ளையடித்த பலே திருடர்கள்
கடந்த திங்கள்கிழமை (08.06.2015) அன்று சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கத[...]
என் கடைசி மூச்சு வரை காதலனுடன் சேர்ந்து வாழ போராடுவேன்: தற்கொலைக்கு முயன்ற காதலி
சேலம் மாவட்டத்தில் தற்கொலைக்கு முயன்ற பெண் ஒருவர், கடைசி மூச்சு இருக்கும் வரை காதலனுடன் சேர்ந்து வா[...]
பிரதமர் மோடி என்னை விட திறமையான விற்பனையாளர்: மன்மோகன்சிங் அதிரடி
பிரதமர் மோடி தன்னை விட திறமையான விற்பனையாளர் என்று முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் கருத்து தெரிவித்து[...]
அப்பீலுக்கு மேலே அப்பீல்: ஜெயாவை பிடித்து உள்ளே போட முயற்சி.... பலிக்குமா முயற்சி?
சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து, ஜெயலலிதா உள்ளிட்ட நால்வரை, கர்நாடக உயர் நீதிமன்றம் விடுதல[...]
முதல்வர் ஓ.பி.எஸ். ராஜினாமா எப்போது?
சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து ஜெயலலிதா விடுதலை செய்யப்பட்ட நிலையிலும் இன்னமும் முதல்வர் ஓ.பன[...]
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.