↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad

விஜய் நடிக்கும் 58வது படத்தின் படப்பிடிப்பு வரும் நவம்பர் 10ம் தேதி சிம்புதேவன் இயக்கத்தில் தொடங்குகிறது. கத்தி படத்தின் வெற்றியைக் கொண்டாட குடும்பத்துடன் லண்டனுக்குச் சென்றுள்ளார் விஜய். இன்னும் இரு தினங்களில் லண்டனிலிருந்து திரும்பும் விஜய், இந்தப் படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்கிறார்.

இந்தப் படம் முழுக்க முழுக்க லார்ட் ஆப் த ரிங்க்ஸ் மாதிரி கற்பனை உலகில் நிகழும் கதையாகும். இந்தப் படத்துக்காக கிழக்கு கடற்கரைச் சாலையில் ஒரு பெரிய அரண்மனை செட் போட்டுள்ளார் கலை இயக்குநர் முத்துராஜ். விஜய்க்கு ஜோடியாக ஹன்சிகா நடிக்கிறார். கன்னட ஹீரோ கிச்சா சுதீப், நடிகை ஸ்ரீதேவி ஆகியோர் முக்கிய ரோலில் நடிக்கிறார். இன்னொரு நாயகியாக ஸ்ருதிஹாஸன் நடிக்கிறார். சென்னையில் முதல் கட்டப் படப்பிடிப்பு முடிந்ததும், கேரளா செல்லும் படக்குழு, அங்குள்ள சாலக்குடி, நீலாம்பதி அடர் காடுகளில் மீதிப்படத்தை எடுக்கிறார்கள்.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top