ஆம்பளயில் மூன்று அழகான அத்தைகளின் மகள்களை காதலிக்கிறார் என்றுதான் விஷாலின் கதாபாத்திரம் குறித்து சொல்லப்பட்டது. அத்தைகளுடன் படத்தில் செமத்தியான அரசியலும் இருக்கிறதாம்.
சுந்தர் சி. இயக்கிவரும் இந்தப் படத்தில் ரம்யா கிருஷ்ணன், கிரண், ஐஸ்வர்யா ஆகிய ரிட்டையர்ட் நடிகைகள் விஷாலின் அத்தைகளாக வருகின்றனர். இவர்களுக்கு தலா ஒரு அழகான மகள். அவர்களை விஷாலுக்கு மணமுடித்து வைக்க ஒரு போட்டியே படத்தில் நடக்குமாம்.
சரிதான், அடல்ஸ் ஒன்லி டைப்பில் ஒரு கதை என்று நினைத்தால், அரசியலையும் கைமா செய்கிறார்களாம் படத்தில்.
ஆம்பளயில் அரசியல் கட்சிகளுக்கு காசுக்கு ஆள்களை ஏற்பாடு செய்து தருகிறவராக விஷால் நடித்து வருகிறாராம். ஆளுக்கும், தேவைக்கும் பொறுத்து காசு. கதைக்களம் அரசியல் என்பதால் நடப்பு அரசியலை நையாண்டி செய்து நையப்புடைத்திருக்கிறார்களாம்.
பொங்கலுக்கு படம் வெளியாகிறது.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.