↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad

சூப்பர் ஸ்டார் ரஜினி, சோனாக்ஷி சின்ஹா, அனுஷ்கா நடிக்கும் லிங்கா படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்துள்ளது. இந்த படத்திற்கு கலை இயக்குனராக பணியாற்றி இருப்பவர் அமரன். இவர் பிரபல கலை இயக்குனர் சாபுசிரிலிடம் உதவியாளராக இருந்து கலை இயக்குனராக உயர்ந்தவர். கே.எஸ்.ரவிகுமாரின் பஞ்சதந்திரம் படத்தில் உதவி கலை இயக்குனராக பணியாற்றிய அமரன் மீண்டும் அவர் இயக்கும் லிங்கா படத்தின் தனி கலை இயக்குனராகியிருக்கிறார். 

இதுபற்றி அவர் கூறியதாவது: திருச்சி மண்டல பொறியியல் கல்லூரியில் பி.ஆர்க் முடித்துவிட்டு மும்பையில் மாஸ்டர் ஆஃப் டிசைனிங் படித்தேன். சினிமாவில் பணியாற்ற விரும்பி சாபுசிரில் சாரிடம் உதவியாளராக சேர்ந்தேன். அவரிடம் தொழில் கற்று ஜித்தன் படத்தின் மூலம் கலை இயக்குனராக ஆனேன். மிஷ்கினின் அனைத்து படங்களிலும் கலை இயக்குனராக பணியாற்றி உள்ளேன். இதுவரை நிறைய படங்களில் பணியாற்றி இருந்தாலும் லிங்கா படத்தில் பணியாற்றியது வாழ்நாள் பெருமை. 

சூப்பர் ஸ்டார் எனது ஒவ்வொரு ஷெட்டையும் பார்த்துவிட்டு வியந்து பாராட்டுவார். அவரது எளிமையும், பாராட்டும் என் வாழ்நாளில் மறக்க முடியாத அனுபவங்கள். ஒரு சாதாரண கலை இயக்குனர்தானே என்று நினைக்காமல் ஒரு நண்பனை போல பழகினார். அவருடன் தொடர்ந்து பணியாற்ற ஆசையாக இருக்கிறது. அதற்காக வாய்ப்பு தொடர்ந்து கிடைக்க வேண்டும் என்று விரும்புகிறேன். என்கிறார் அமரன். 

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top