↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad

இந்தியாவில் பெரும் சாதனை புரிந்தவர்களுக்கு வழங்கப்படும் உயரிய விருதான 'பாரத ரத்னா' விருதிற்கு அடுத்தப்படியானது தான் பத்ம விருதுகள். அந்த வகையில் சமீபத்தில் 2015 ஆம் ஆண்டிற்கான பத்ம விருதுகள் விழா நடைபெற்றது. 

இந்த விருது விழாவில் நடிகர் அமிதாப் பச்சன் 'பத்ம விபூஷண்' என்னும் விருதைப் பெற்றார். இந்த விருது விழாவிற்கு அமிதாப் பச்சனின் குடும்பமே கலந்து கொண்டு ஆதரித்தது. அதிலும் நடிகை ஐஸ்வர்யா ராய் ஆரஞ்சு நிற அனார்கலியில் பளிச்சென்று வந்து, அங்குள்ளோர் அனைவரது கண்களையும் கவர்ந்தார். இங்கு 2015 ஆம் ஆண்டின் பத்ம விருது விழாவில் நடிகை ஐஸ்வர்யா ராய் மேற்கொண்டு வந்த ஸ்டைல்கள் உங்கள் பார்வைக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

பத்ம விருது விழாவிற்கு ஐஸ்வர்யா ராய் அபு ஜனி சந்தீப் என்னும் டிசைனர் வடிவத்த ஆரஞ்சு நிற அனார்கலியை அணிந்து வந்திருந்தார். கன்னங்களுக்கு ஆரஞ்சு நிற பிளஷ் அடித்து, உதட்டிற்கு மின்னும் லிப்ஸ்டிக் போட்டு கண்களுக்கு ஸ்மோக்கி மேக்கப் போட்டு வந்திருந்தார்.  ஆரஞ்சு நிற அனார்கலிக்கு ஏற்றவாறு நேர் உச்சி எடுத்து, ஹேர் ஸ்ட்ரைட்னிங் செய்து வந்திருந்தார்.


0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top