↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
அஜீத் நடித்த 'என்னை அறிந்தால்' திரைப்படம் உலகம் முழுவதும் மிகவும் பிரமாண்டமாக வரும் 29ஆம் தேதி ரிலீஸாகவுள்ள நிலையில் இந்த படம் நேற்று அமாவாசை தினத்தில் சென்சாருக்கு அனுப்பப்பட்டது. இந்த படத்தை நாளை சென்சார் அதிகாரிகள் பார்த்து சர்டிபிகேட் கொடுப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் 'என்னை அறிந்தால்' திரைப்படத்தின் வியாபாரம் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாக தயாரிப்பாளர் தரப்பில் இருந்து கூறப்படுகிறது. வெளிநாடுகளிலும் 'என்னை அறிந்தால்' மிக அதிக தியேட்டர்களில் ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இதன்படி பிரான்ஸ் நாட்டில் இதுவரை இந்த படத்திற்கு 30 தியேட்டர்கள் புக் ஆகியுள்ளது.

பிரான்ஸ் நாட்டில் இதுவரை ரஜினியின் 'லிங்கா' மட்டுமே அதிகபட்சமாக 53 திரையரங்குகளில் ரிலீஸ் ஆனது. தற்போது இரண்டாவது இடத்தை அஜீத்தின் 'என்னை அறிந்தால்' பிடித்துள்ளது. பிரான்ஸ் நாட்டில் விஜய்யின் 'கத்தி' 24 தியேட்டர்களிலும், ஷங்கரின் 'ஐ' மற்றும் விஜய்யின் 'ஜில்லா' ஆகிய திரைப்படங்கள் 23 தியேட்டர்களிலும், அஜீத்தின் வீரம் 10 தியேட்டர்களிலும் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top