↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
விஜய், முருகதாஸ் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும்? மறுபடியும் வெடித்த பிரச்சனை - Cineulagam
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்த ‘கத்தி’ திரைப்படம் கடந்த ஆண்டு வெளியானது. இந்த திரைப்படத்தின் கதை, தான் இயக்கிய தாகபூமி என்ற குறும்படத்தின் கதை என்றும், தன்னுடைய கதையை இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் திருடிவிட்டதாகவும், அதற்கு நஷ்டஈடு என தஞ்சையை அடுத்த இளங்காடு கிராமத்தை சேர்ந்த அன்பு.ராஜசேகர் என்பவர் தஞ்சை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கில் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ், நடிகர் விஜய், தயாரிப்பாளர்கள் கருணாகரன், சுபாஷ்கரன், ஒளிப்பதிவாளர் ஜார்ஜ் வில்லியம் ஆகிய 5 பேரும் நேரில் ஆஜராக வேண்டும் என்று ஏற்கனவே சம்மன் அனுப்பப்பட்டு இருந்தது.
இந்தநிலையில் நேற்று இந்த வழக்கு நீதிபதி முகமதுஅலி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ், நடிகர் விஜய் உள்பட 5 பேரும் ஆஜராகவில்லை. இதையடுத்து இந்த வழக்கு விசாரணையை அடுத்த மாதம் 24-ந் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி முகமது அலி உத்தரவிட்டார். அன்றய தினம் கண்டிப்பாக அவர்கள் ஆஜராக வேண்டும் என்றும் இதில் கூறப்பட்டுள்ளது.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top