↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
Isaiஇப்போது இயக்குநர்களுக்கும், தயாரிப்பாளர்களுக்கும் இருக்கும் மிகப்பெரிய சவால், படத்தை ரிலீஸ் செய்வதுதான். வெளியீட்டுக்குத் தக்கவாறு தியேட்டர்கள் கிடக்காமல் பல படங்கள் முடங்கிக் கிடக்கின்றன.
சமீப காலமாக பெரிய ஸ்டார்களின் படங்களாக இருந்தாலும் முதல் மூன்று நாள் வசூல் மட்டுமே பெரிய தொகையாக அமைவதால் படம் ஓடும் நாள்களைக் குறைத்து தியேட்டர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்தும் உத்தி கையாளப்பட்டு வருகிறது.
அதனால், பெரிய ஸ்டார்களின் படங்கள் ரிலீசாகும் தேதிகளில் மற்றவர்கள் ஒதுங்கி வழிவிட வேண்டிய நிலைக்கு ஆளாகிவிட்டார்கள். இந்த வரிசையில் சில ஆண்டுகள் தயாரிப்பிலும், பல மாதங்கள் வெளியீட்டிலும் சிக்கிக் கொண்டு தவித்துக் கொண்டிருக்கிறது எஸ்.ஜே.சூர்யாவின் ‘இசை’.
இரண்டு மாதங்களுக்கு முன்பே வெளியீட்டுத் தேதியெல்லாம் அறிவித்து விளம்பரங்கள் கொடுத்தும், படத்தை வெளியிட முடியாமல் இருந்த சூர்யாவுக்கு இப்போது அஜித் வழிவிட்டிருக்கிறார்.
அஜித்தின் ‘என்னை அறிந்தால்’ வெளியீடு இம்மாதம் 29-க்கு அறிவிக்கப்பட்டு பின்னர் பிப்ரவரி, 5-ம்தேதிக்குப் போக, சுதாரித்துக் கொண்ட சூர்யா, தன் படத்தை அஜித் படம் தள்ளிப்போன கேப்பில் இம்மாதம் 30-ம் தேதி 300 தியேட்டர்களில் வெளியிடுவதாக அறிவித்திருக்கிறார்.
அவரே நடித்து, தயாரித்து, இயக்கி, இசையும் அமைத்திருக்கும் படம் என்பதால் அவர் இவ்வளவு கவனம் எடுத்து ரிலீஸ் செய்ய வேண்டியிருக்கிறது.
இதுக்கு மேல ‘கேப்’ கிடைக்காது சூர்யா. ‘கிடா’ வெட்டிடுங்க..!

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top