↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad இங்கிலாந்து அணிக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டி இலங்கையின் நட்சத்திர ஆட்டக்காரர்களான ஜெயவர்த்தனே, சங்கக்காரா ஆகியோருக்கு இலங்கை மண்ணில் கடைசி போட்டியாக அமைந்தது.
இங்கிலாந்து அணியுடனான 7 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இலங்கை 5-2 என்ற கணக்கில் தொடரை வென்றது. இதன் இறுதிப் போட்டி நேற்று கொழும்பு ஆர்.பிரேமதாஸ மைதானத்தில் நேற்று நடைபெற்றது.
இந்தப் போட்டியில் 45வது ஓவரை ஜெயவர்த்தனே வீசினார். அப்போது அவரது பந்தை கடைசி விக்கெட்டாக நின்று விளையாடிய டிரெட்வெல் ஏறி சிக்சர் விளாச நினைத்தார். ஆனால் பந்தை அவர் தவறவிட விக்கெட் கீப்பரான சங்கக்காரா அவரை `ஸ்டெம்பிங்’ செய்து போட்டியை முடித்து வைத்தார்.
இதனால் இலங்கை அணி 87 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. தொடரை வென்ற கையோடு ஜெயவர்த்தனேவும், சங்கக்காராவும் இலங்கை மண்ணில் ஒருநாள் போட்டிகளுக்கு விடைகொடுத்தனர்.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top