↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad பிரேசிலை சேர்ந்த இளைஞர் ஒருவர் வேடிக்கைக்காகவும், ஜாலிக்காகவும் 41 பேரை கொலை செய்துள்ள சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
பிரேசிலை சேர்ந்த 26 வயதான வாலிபர் சைல்சன் ஜோஸ் டாஸ் கிரேகாஸ்.
இவர் ஜாலிக்காக 41 பேரை கொலை செய்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார், இதில் 37 பேர் பெண்கள் ஆவர்.
கருப்பர் இனப் பெண்கள், வெள்ளையர் இனப் பெண்கள் என பாரபட்சம் பார்க்காமல் கொலை செய்துள்ளார், கொலை செய்வதற்கு முன்பு தான் குறிவைத்துள்ள பெண்களின் பின்னால் சிலநாட்கள் சென்று கண்காணித்து பின்னரே கொலை செய்வதாக பொலிஸ் கமிஷனர் ஹென்ரிக் மெடினா கூறியுள்ளார்.
மேலும் இவர் மனநலம் பாதிக்கப்பட்டுள்ள சைக்கோ இளைஞர் என்றும், பலரை கொலை செய்துள்ள போதிலும் 41 பேரை கொன்றதற்கான ஆதாரங்கள் மட்டுமே கிடைத்துள்ளது எனவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து வாலிபர், கொலை செய்தால் தான் தனக்கு இரவு தூக்கமே வரும் என்றும், இல்லாவிட்டால் வீட்டுக்குள் அங்கும் இங்கும் நடமாடிக் கொண்டே இருப்பேன் எனவும் கூறி மக்களை பதறவைத்துள்ளார்.
தற்போது கைது செய்து சிறையில் அடைபட்டிருக்கும் சைல்சனுக்கு, 30 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top